Saturday, May 17, 2025
-- Advertisement--

தன் மகனின் செயலைக் கண்டு நெகிழ்ச்சி அடைந்த அருண் விஜய்!! மகன் வளர்ந்துவிட்டான்.!!

தமிழ் சினிமாவில் நடித்த சில படங்களிலேயே வெற்றி பெற்ற நடிகர்கள் நிறைய உள்ளனர். ஆனால் கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேலாக சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க பல வருடப் போராட்டம் தேவைப்பட்டது நடிகர் அருண் விஜய்க்கு. இவருக்கு சினிமா பின்புலம் இருந்தாலும் சினிமாவில் வெற்றி பெற நிறைய கஷ்டங்களை தாண்டி வந்தார்.

தமிழில் முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் விஜய். இப்படத்துக்கு பிறகு இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இதற்கு பெரிதாக வெற்றி படங்கள் எதுவும் அமையவில்லை. இந்நிலையில் அஜீத் நடித்த என்னை அறிந்தால் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பிறகு
படங்களில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு வந்தது.

குற்றம் 23, செக்கச்சிவந்தவானம், தடம், சகோ, மாபியா பல படங்களில் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் கைவசம் வா டீல் , அக்னி சிறகுகள் போன்ற படங்கள் உள்ளன.

அருண்விஜய் ஆரத்தி என்கிற பெண்ணை திருமணம் செய்துகொண்டு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகன் பெயர் அர்னவ், பள்ளி படித்துக் கொண்டிருக்கும் இவர் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கிறார். இந்நிலையில் தெருவில் வசிக்கும் ஒரு நாயைப் பார்த்து அம்மா நாம் அந்த நாய்க்கு உணவளிக்க வேண்டும் ஏனென்றால் அவர்களுக்கு குழந்தை உள்ளது என்று கூறி நாய்களுக்கு உணவு அளித்துள்ளார். இதை கண்டு என் மகன் வளர்ந்து விட்டான் என்பதை நான் உணர்கிறேன், என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles