தமிழ்த் திரையுலகை பொறுத்தவரை நகைச்சுவைக்கென்றே ஒரு தனி இடம் உள்ளது. அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரை பல நடிகர்கள் நகைச்சுவையால் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர். அந்த வகையில் தனது சிரிப்பின் மூலமாகவே ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதைக் கவர்ந்தவர் குமரிமுத்து.
சிறுவயதிலேயே படிப்பின் மீது நாட்டம் இல்லாமல் சினிமா மோகத்தால் சினிமாவை நோக்கி வந்தார். இதுவரை 700-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். பாக்யராஜ் இயக்கத்தில் வந்த இது நம்ம ஆளு படத்தில் இவரது கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது.
இந்நிலையில் இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் காலமானார். சில தினங்களாக வீடியோ ஒன்று மிகவும் வருகின்றது. அதில் அவர் என் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் அமைதி. அமைதியாக இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.
