கொரானோ ஊரடங்கு காரணமாக நாட்டு மக்கள் பலர் வறுமையில் வாடி உள்ளனர். இதில் சினிமா துறையைச் சார்ந்தவர்களும் சின்னத்திரையில் சார்ந்தவர்களும் வறுமையில் வாடி உள்ள நிலையில் எத்தனை பேர் இவர்களுக்கு உதவி செய்தாலும் பலரின் கைகளில் இருந்த உதவி போய் சேரவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. இந்நிலையில் சினிமா சீரியல் வட்டாரத்தில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு உள்ளதால் அதை சார்ந்த பிழைப்பு நடத்துவோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல சீரியல் நடிகர் மன்மித். இவர் ஆட்சி புரிந்து நகைச்சுவை சீரியல் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தன் மனைவியுடன் கார்கர் நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஓர் ஆண்டுக்கு முன்பே அவருக்கு வேலை வாய்ப்பு இல்லை. அதனால் மிகுந்த வறுமையில் வாடி வந்துள்ள அவர், ஊரடங்கால் வீட்டிலேயே பேனில் துப்பட்டாவால் தூக்கிட்டு கடந்த சனிக்கிழமை தற்கொலை செய்துள்ளார்.
தூக்கில் கணவன் இருப்பதை கண்டதும் கூச்சலிட்ட மனைவி அக்கம் பக்கத்து அறை அழைத்த போது அவருக்கு கொரானோ இருக்கும் என்ற அச்சத்தில் யாருமே வரவில்லை. இதனால் காவலாளி வந்து துப்பட்டாவை வைத்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல உயிர் இழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் இவர் தற்கொலை செய்து கொண்டிருப்பாரோ என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். இவருக்கு வயது 32 வாழ வேண்டிய வயதில் வறுமை அவரை தற்கொலைக்கு இழுத்து சென்றது மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.