சமீபகாலமாக நிறவெறி குறித்து பலரும் பேசி வருகின்றனர். இந்நிலையில் தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் பரிச்சயமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஏமி ஜாக்சன். இவர் வெளிநாட்டு பெண் என்றாலும் நம் தமிழ்நாட்டு கலாச்சாரத்தோடு பொருந்திப் போவதாக பல ரசிகர்கள் இவர் குறித்து கருத்து கூறுகின்றனர். இந்நிலையில் இவர் தற்போது நிறவெறி தாக்குதல் குறித்து ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.

இப்படிப்பட்ட ஒரு எதிர்காலம் நம் வாழ்க்கையில் என்றும் நடக்கக்கூடாது, நான் என் மகனுக்கு சிலவற்றை கற்றுக்கொடுப்பேன். மிகவும் அன்பாக இருக்க வேண்டும், மற்றவரிடம் பணிவாக இருக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுப்பேன். நிற பாகுபாட்டிற்கு எதிராக நான் என் முதல் கல்லை எடுத்து வைத்துள்ளேன். ஆனால் அடுத்த பிரச்சினை ஒன்று வந்தால் நான் இதை மறந்துவிடு விடுவதாக இல்லை, என் குழந்தையை நிறவெறிக்கு எதிராக அன்பு மற்றும் மனித நேயத்துடன் வளர்ப்பேன், என்று அனைவரையும் சமமாகப் பார்க்க வேண்டும், மதிக்க வேண்டும் என அவனுக்கு கூறுவேன், என்று கூறியுள்ளார்.