அவன் இவன் போன்ற படங்களில் நடித்தவர் ஜனனி ஐயர். இவர் தெகிடி என்ற படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். அந்த படத்திற்கு பிறகு இவர் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
நல்ல அழகும் திறமையும் உள்ள ஜனனி ஐயர். சினிமாவில் ஜொலிக்கவில்லை என்பதே உண்மை. இந்த ஏக்கம் இவருக்கு பல நாட்களாக இருந்துள்ளது.
நிறைய படவாய்ப்புகளை பெறுவதற்காக ஜனனி ஐயர் பிக்பாஸில் கலந்து கொண்டார். ஆனால் அந்த சீசனில் இறுதி சுற்று வரை சென்றார், இருப்பினும் அவருக்கு படவாய்ப்புகள் சரியாக அமையவில்லை. இருப்பினும் இவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் தமிழ் சினிமாவில் உள்ளது.
இந்நிலையில் இவர் சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கருப்பு நிற உடையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்து மிகவும் அழகாக உள்ளீர்கள் என ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

