தமிழில் விஜய்,அஜித் போன்ற முன்னணி நடிகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்தவர் நடிகை நமீதா. இவர் நடித்த காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார். இவர் சில படங்களில் கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்ததால் இவருக்கு தொடர்ந்து அதுமாதிரியே வாய்ப்புகள் வந்தன.

அதன் பிறகு மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் இவர் நடித்தார். இவர் செல்லமாக தமிழ் மக்களை மச்சான்ஸ் என்று அழைப்பார். பிக்பாஸ் சீசன் 1 கலந்து கொண்டதன் மூலம் இவர் மீண்டும் தமிழகத்தில் பிரபலம் ஆனார். சற்று உடல் எடை கூடியதால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தன.

இவர் சினிமா பட தயாரிப்பாளர் வீர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இவர் டிவி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் அவர் ஏழு வருடமாக பரதம் கற்றுள்ளதாகவும், அரங்கேற்றம் செய்யவில்லை என்றும், முதல் முதலாக நான் இப்போது தான் இதை சொல்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.