செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகம் ஆகி அதன் பின் விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் நடித்து மக்கள் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை பிரியபவானி ஷங்கர்.

சீரியல் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆக இவருக்கு பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. நடிகர் வைபவ் நடித்த மேயாதமான் படத்தில் நடித்ததன் மூலம் இவரை கதாநாயகியாக ரசிகர்கள் ஒப்புக்கொண்டனர். இதன் பிறகு தமிழ் பட வாய்ப்புகள் இவருக்கு நிறைய வர ஆரம்பித்தன.

இவர் இணையத்தில் தன் ரசிகர்களுடன் நேரலையில் பேசிக்கொண்டிருக்கும் பொது ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பினர். இதற்கு பிரியாவும் கவனமாக பதில் அளித்து வந்தார். அப்போது செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய பொழுது ஒரு நாளைக்கு 360 ரூபாய் முதல் சம்பளமாக பெற்றாராம். இதனை ரசிகர் ஒருவர் சமூகவலைத்தளத்தில் கேட்க ப்ரியாவே உண்மையை கூறினார்