தமிழ் சினிமாவில் சிட்டிசன் என்ற படத்தில் துணை நடிகையாக அறிமுகமானவர் சமீரா. அதன் பிறகு காதல் படங்கள் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்த கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் சமீரா ரெட்டி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். இந்த படத்திற்கு பிறகு பல படங்களில் இவர் நடித்து வந்தார்.

தமிழ்மொழி மட்டுமின்றி இந்தி, தெலுங்கு என பிற மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். படவாய்ப்புகள் குறைந்ததால் கடந்த 2014 ஆம் அண்டு ஆசிப் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகிய சமீரா தற்போது குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வருகிறார்.

இந்நிலையில் இவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதை அடுத்து என்று அழகான பெண் குழந்தை பிறந்தது. தற்போது தவழும் குழந்தையாக உள்ள நைரா வீட்டில் உள்ள பாட்டிலில் உள்ள தண்ணீரை கீழே துப்பி விட்டு அதை அவரே கிளீன் செய்து விளையாடுகிறார். இந்த சுட்டித்தனமான வீடியோ பார்த்து பலரும் ஓவர்லோடு எனவும் செல்லகுட்டி எனவும் அவரை கொஞ்சி வருகின்றனர். இதோ அந்த வீடியோ