தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் கேடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் .ஆனால் ஆரம்பத்தில் இவர் வில்லியாக நடித்து இருந்தாலும் அதன் பிறகு கதாநாயகி வாய்ப்புகள் அதிகம் வந்தன.

அதன்பிறகு கல்லூரி என்ற படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே நல்ல நடிகை என்ற பெயர் பெற்றார்.தொடர்ந்து இவர் தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், விக்ரம், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களின் ஒருவராக உள்ளார்.

பாகுபலி படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து நடித்ததற்கு பிறகு இவரது மார்க்கெட் மிகவும் உயர்ந்தது. தற்போது இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் கலைத் துறையில் மிகவும் சிறந்து விளங்கியதால் கலைமாமணி விருதும் இவருக்கு கிடைத்தது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் கொரானோ முடிந்த பிறகு என்னை எழுப்புங்கள் என்பதற்கு பதிலாக “எல்லாம் முடித்துவிட்டு என்னை எழுப்புங்கள்” என்று பதிவிட்டார்.அதனால் இந்த வசனம் சர்ச்சைக்குள்ளாகி விட்டது .அதை பலரும் இரட்டை அர்த்தத்தில் புரிந்து கொண்டு கருத்து கூறி வருகின்றனர்.