தற்பொழுது பொது முடக்கம் காரணமாக பல லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்து திண்டாடி வருகின்றனர். எப்படியாவது ஒரு வேலையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள பல இளைஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர்.
அதை சாதகமாக பயன்படுத்தி பல நிறுவனங்கள் இளைஞர்களை ஏமாற்றி பணம் வாங்கி வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள சென்னை, திருச்சி, கோவை, மதுரை, தூத்துக்குடி விமான நிலையங்களில் வேலை வாய்ப்பு என்று கூறி தேர்வுகள் எதுவுமே இல்லாமல் ஆன்லைனில் சான்றிதழ் மட்டும் சரி பார்த்துவிட்டு வேலை தருவதாக வேலை தேடும் இளைஞர்களை குறிவைத்து ஒரு மோசடி நடைபெற்று வந்தது . இப்போது வெளியே வந்து உள்ளது.
அதில்
Urgent job Requirements in Airport Authority of India 8th-12th,anydegree,diploma,B.E 30K-50K salary with free Accom Vacancy for both Fresher &Expr Cl: *
இப்படி ஒரு எஸ்எம்எஸ் உங்களுக்கு இதற்கு முன்பு வந்து இருக்கலாம், இதற்கு ஆசைப்பட்டு உள்ளே செல்கிறவர்கள் ரூபாய் 50,000 வரை ஊதியம் எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் , பி-இ முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு என கவர்ச்சிகரமான விளம்பரம் அல்லது ஒரு குறுஞ்செய்தி வாட்ஸ் அப் குழுக்களில் நேரடியாக அனுப்பப்படுகின்றது. இதைப்பார்த்து வேலைக்கு போக ஆசைப்பட்டு சிலர் அந்த எண்ணை தொடர்பு கொண்டால் அவர்கள் நீங்கள் உடனே விண்ணப்பிக்க வேண்டும் என்ற அளவிற்கு உங்கள் ஆசைகளை தூண்டி உங்களை மூளைச்சலவை செய்து ஒரு பெண் பெயர் பேசுகிறார்.

அவர்கள் கூறிய எண்ணிற்கு சான்றிதழ் கோரி HR டிபார்ட்மெண்டில் இருந்து பேசுவதாக வேறு ஒரு நபர் தொடர்பு கொள்வார். சான்றிதழ்களை தகுதி விமான நிலையத்தில் ஒரு வேலையைச் சொல்லி ஊதியம் நிர்ணயம் செய்யப்படுகிறது, உணவு தங்குமிட வசதி போன்றவை உள்ளது எனவும் விமான நிலையத்தில் குறுகிய கால பயிற்சிக்குப் பின்பு வேலை நிரந்தரம் என்றும் பயிற்சி காலத்தில் கணினி அடையாள அட்டைக்கு ரூபாய் 5 ஆயிரம் செலவாகும் என்றும் இதில் பாதியை விமான நிலையமே ஏற்றுக்கொள்ளும் என்றும் மீதமுள்ள 2500 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தலாம் என்றும் சொல்கிறார்கள்.
இவர்களின் பேச்சை நம்பி வங்கி கணக்கில் சொன்ன தொகையை செலுத்தி விடுகின்றனர். அதன் பின்பு பணம் செலுத்தப்பட்ட 2 தினங்களில் இந்திய விமான நிலைய ஆணைய லெட்டர் பேடில் அப்பாயின்மென்ட் ஆர்டர் பதிவு தபாலில் வீட்டுக்கு வருகின்றது. 28 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் இதற்கு குறிப்பிட்ட தொகை 10,00, 0 20,000 வரை முன்பணம் செலுத்த வேண்டும் என்று ஒரு வங்கி கணக்கு விவரத்தை தருகிறார்கள்.

நீங்கள் பணம் செலுத்திய பின்பு அந்த எண்ணை தொடர்பு கொண்டால் அந்த எண் பிளாக் செய்து விட்டு அடுத்த நபரை அவரை அவர்கள் குறி வைக்க தொடங்கிவிடுவார்கள். அதன் பின்பு விசாரித்த பிறகுதான் தெரிகிறது, இவை அனைத்தும் போலி என்று எனவே போலி கணக் கில் வயது வருகிறது உண்மையான கணக்கில் எது வருகிறது என்று இந்த இன்றி நிலவரத்தை ஆராய்ந்து அதன் பிறகு நீங்கள் வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்