மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் எம்ஜிஆர் தமிழ் சினிமாவில் தனி இடம் பிடித்து மக்கள் மனதில் மாபெரும் இடத்தை பிடித்து என்றும் அளிக்க முடியாத புகழைக் கொண்ட ஒரே மனிதர்.
இன்று நான்தான் எம்ஜிஆர், என்னால் தான் எம்ஜிஆர் ஆட்சியைக் கொடுக்க முடியும், நான் எம்ஜிஆரின் வாரிசு என்று எம்ஜிஆரின் பெயரை இன்றும் உபயோகித்து வருகிறார்கள் நமது நாட்டு அரசியல் தலைவர்கள். எம்ஜிஆரின் ஆட்சி யாராலயும் கொடுக்க முடியாது என்பது தான் உண்மை. அப்படிப்பட்ட ஒரு ஆட்சியை கொடுத்தால் மக்கள் மனதில் நீங்கா இடம் பெறலாம்.

நேற்று எம்ஜிஆர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு நாடெங்கும் அவரது பாடல் ஒரு பக்கம் ஒலித்துக் கொண்டிருக்கிறது அவரது படங்களுக்கு மரியாதை செலுத்துகிறார்கள். பல கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்து நல்லாட்சி புரிந்த எம்ஜிஆர் அவர்களை மறுபடியும் நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும் அப்படித்தான் இருந்தது தலைவி படத்தில் அரவிந்த்சாமியின் எம்ஜிஆர் கெட்டப்.

முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் எடுத்து வருகிறார்கள். ஜெயலலிதாவாக ஹிந்தி நடிகை கங்கனா ராவத் நடிக்கிறார் இவர் ஏற்கனவே தமிழில் ஜெயம் ரவியின் தாம்தூம் படத்தில் ஹீரோயினாக நடித்தவர். இந்தப் படத்தில் எம்ஜிஆர் ஆக அரவிந்த்சாமி நடித்து வருகிறார்.

எம்ஜிஆரின் நினைவு நாளை முன்னிட்டு தலைவி படக்குழு வெளியிட்ட புகைப்படத்தில் அரவிந்த் சாமியை பார்க்கையில் அச்சு அசல் எம்ஜிஆர் அவர்கள் திரும்ப வந்தது போல தோன்ற வைத்துள்ளது. தற்பொழுது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. எம்ஜிஆர்யை திரும்ப பார்த்தது போல இருக்கிறது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

