தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு மார்ச் 13ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த தேர்வில் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான வழிமுறைகளை காண்போம்.
அரசு தேர்வு இயக்குநரகம் அறிக்கையின் படி பனிரெண்டாம் வகுப்பு தேர்வு மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடக்கப்படும். அதே சமயம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை நடைபெறும். இந்த தேர்வில் கிட்டத்தட்ட 8.8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

தேர்வு நேரம்:
தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1:15 மணி வரை நடைபெறும் அதில் முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளை படிக்க கொடுக்கப்படும்.
மாணவர்களின் விவரங்கள் சரிபார்ப்பு காலை 10 10 மணி முதல் 10 15 மணி வரை நடைபெறும் தேர்வு காலை 10 15 முதல் மதியம் 1:15 மணி வரை நடைபெறும்.

தேர்வின் விதிமுறைகள்:
மாணவர்கள் கடைசி நிமிட அவசரத்தை தவிர்க்க முன்கூட்டியே தேர்வு நடைபெறும் இடத்திற்கு வர வேண்டும்.
மாணவர்களின் அனுமதி அட்டை மற்றும் பள்ளி அடையாள அட்டையை தேர்வு மையத்திற்கு கொண்டு வர வேண்டும்.
மாணவர்கள் அந்தந்த பள்ளி சீருடையில் வந்து தேர்வு எழுத வேண்டும்.
தேர்வு கூடத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கோவிட் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
தேர்வு கூடத்திற்கு மின்னணு சாதனங்கள் கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களின் சொந்த பேனா மற்றும் பிற எழுதுகோல்களை எடுத்துச் செல்ல வேண்டும்.

விடைத்தாளில் கருப்பு மற்றும் நீல நிற பேனாவால் மட்டுமே தேர்வு எழுத வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் கலர் பென்சில் பேனாவால் எழுதக்கூடாது.
மாணவர்கள் புகைப்படம், பதிவு எண் பாடம் முதலான விவரங்கள் கொண்ட முகப்புத்தால் முதன்மை விடைத்தாள்களுடன் இணைத்து வழங்கப்படும். அதனை சரிபார்த்து மாணவர்கள் கையொப்பமிட வேண்டும்.
தேர்வில் ஒதுங்கின செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் பொது தேர்வு குறித்து ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் புகார்கள் இருந்தால் தேர்வு கட்டுப்பாட்டறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு காலங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.9498383081, 9498383075 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு, உரிய விளக்கம் பெறலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.