லெபனானில் உள்ள துறைமுகத்தில் 2450 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் ஆறு ஆண்டுகளாக வைத்திருந்த காரணத்தினால் இரு தினங்களுக்கு முன்பு திடீரென வெடித்து சிதறியுள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதே போன்று தற்போது சென்னை துறைமுகத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் பறிமுதல் செய்யப்பட்டு துறைமுகத்திற்கு அருகில் வைக்கப் பட்டிருக்கும் செய்திகள் வெளிவந்தன . இதனால் தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது ஆறு வருடங்களாக இந்த அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது லெபனானில் நடைபெற்ற சம்பவத்தை போன்ற சென்னையிலும் வெடித்து விபத்து நடந்து விடுமோ என்ற அச்சம் மக்களிடையே அதிகரித்துள்ளது.இதனால் சுங்கத்துறை அதிகாரிகள் வெடிமருந்து வைக்கப்பட்டுள்ள மணலி பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையை அடுத்த மணலியில் சுங்கத் துறைக்கு சொந்தமான கிடங்கு பகுதியில் சாஃடா எனப்படும் சி.எப்.எஸ் கிடங்களில் தற்போது 740 டன் அம்மோனியம் நைட்ரேட் தனது 37 கன்டெய்னர்களில் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளதாகவும் கெமிக்கல்ஸ் நிறுவனம் கடந்த 2014 ஆம் ஆண்டு 740 அமோனியம் நைட்ரேட்டை சென்னைக்கு இறக்குமதி செய்துள்ளதாகவும் அதற்கான உரிய அனுமதி பெறவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதன் தொடர்பாக நீதிமன்றம் 5 ஆண்டுகளாக நடைபெற்று: இதனையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நீதிமன்றம் மீது வழக்கு தொடர்ந்து இறுதி உத்தரவை பிறப்பித்துள்ளது.
சென்னையில் இரண்டாவது நாளாக சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை இயக்குனர் சந்திரசேகரன் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வின்படி அம்மோனியம் நைட்ரேட் ஆனது பாதுகாப்பான முறையில் உள்ளதாகவும் இணைத்தளம் சுற்றுச்சூழல் தலைமையிலான குழு தெரிவித்துள்ளது. இதில் 700 கிலோ மீட்டர் தொலைவில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் மணலி புதுநகர் உள்ளது.
இந்த புதூரில் 7 ஆயிரம் பேரும்,1 .5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சடையன் குப்பத்தில் 5 ஆயிரம் பேரும் வசித்து வருகின்ற்னர். மிக தொலைவில் மக்கள் வாசிப்பதால் அமோனியா நைரேட் 25 கிலோ பைகளை பாதுகாப்பாக வைக்கப்பட்டுவருவதாக அறிக்கை வெளியவந்துள்ளது. இந்நிலையில் சென்னை மணலி கிடங்கில் உள்ள 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட்டை 3 நாளில் அகற்ற சுங்கத்துறை ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது