சினிமாவில் மடமடவென அசுர வேகத்தில் வளர்ந்தவர் நடிகர் தனுஷ்.
இவரின் ஆரம்ப கால படங்களை நினைத்து பார்க்கும் பொழுதும் தற்பொழுது நடிக்கும் படங்களை பார்க்கும் பொழுதும் மிகப்பெரிய அளவில் வித்தியாசம் இருக்கும்.

இவருக்கென ஒரு தனி ஸ்டைலையும் தனி ஒரு ரசிகர் கூட்டத்தையும் இந்திய அளவில் ஏற்படுத்திக் கொண்டார்.
தமிழ் சினிமாவின் ஜாம்பவான் ஆனா சூப்பர் ஸ்டாரின் மகள் ஐஸ்வர்யாவை இவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு தற்போது லிங்கா,யாத்ரா என்ற இரு மகன்கள் உள்ளனர்.

பல சமயங்களில் சூப்பர் ஸ்டாரின் மருமகன் என்பதால் பல அவமானங்களை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே ஐஸ்வர்யாவும் தனுஷும் பிரிந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் தனுஷ் பட்ட அவமானங்களுக்கு எல்லாம் பழிக்கு பழி வாங்கும் வகையில் பெரிய பல நட்சத்திரங்கள் குடிவாழும் போயஸ் கார்டனில் 4 கிரவுண்ட் இடம் வாங்கி தன் அப்பா அம்மாவிற்கு பெரிய பங்களா போன்று ஒரு வீடு கட்டி உள்ளார்.

இது குறித்து பலர் கூறும் பொழுது வாழும் பொழுதே சொர்க்கத்தை தன் அப்பா அம்மாவிற்கு காண்பித்துள்ளார். தனுஷ் என்று புகழாரம் சூட்டி வருகின்றனர்.