கொரோனாவினால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டே போவதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பதற்கான சரியான தேதி இன்று வரை அரசு தரப்பில் இருந்து அறிவிக்கவில்லை.
சமீபத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்டரங்கில் மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் கடன் உதவிகளை தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன் ஆகியோர் வழங்கினர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கூறியது ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் பள்ளி திறப்பதற்காக மத்திய அரசிடம் இருந்து கடிதம் வந்துள்ளதாகவும் தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் பெற்றோர்களிடம் கருத்து கேட்டு கொரோனா சரியான பின்புதான் பள்ளிகள் திறப்பது பற்றி முதலமைச்சரிடம் ஆலோசனை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் அடுத்த மாதம் வழங்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர். மாணவ மாணவியர்க்கு 14 தொலைக்காட்சி சேனல் வழியாக வருகின்ற ஒன்றாம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என்றார்.