இன்றைக்கு அதிக அளவில் பெண்கள் இரத்த சோகை குறைபாட்டால் பாதிக்கப் பட்டிருக்கின்றனர். இந்த இரத்த சோகை பிரச்சனையை பீட்ரூட். போக்கும் சிறந்த உணவு

பீட்ரூட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள், நார்ச்சத்து, கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளன. பீட்ரூட் உடலை சுத்தம் செய்வதோடு மட்டுமின்றி, இரத்த சோகையைப் போக்கும் மற்றும் எந்த நேரத்திலும் பெண்களுக்கு இரும்புச் சத்து மிகவும் அவசியம். குறிப்பாக கர்ப்ப காலத்தில், இது இன்னும் அவசியம். இரும்புச் சத்து இரத்தத்தின் ஹீமோகுளோபின் உள்ளடக்கத்தை மேம்படுத்த உதவுகிறது.

கர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாறு குடிப்பது ஒரு பெண்ணுக்கு இரத்த
சோகை ஏற்படாமல் தடுக்கிறது. பீட்ரூட்டில் வைட்டமின் “சி” உள்ளது. இந்த வைட்டமின் பீட்ரூட்டில் இருக்கும் இரும்பை உறிஞ்சுவதற்கு உடலுக்குஉதவுகிறது.

பீட்ரூட் இரத்தத்தை சுத்திகரிக்கும் திறனைக் கொண்டுள்ளது. இது பிறப்பால் ஏற்படக்கூடிய குறைபாடுகளிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கிறது.
கருவுற்றிருக்கும் தாய் தன்னுடைய கர்ப்ப காலம் முழுவதும் இந்த சாற்றை உட்கொண்டால், அவள் நிச்சயமாக ஆரோக்கியமான மற்றும் வலிமையான குழந்தையைப் பெற்றெடுக்க முடியும். ஆனால், அவ்வாறு செய்வதற்கு முன்பு, ஒருவர் தங்கள் மகப்பேறு மருத்துவரை அணுகி, அவரது ஆலோசனையின் படி வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்படுகிறது.

சிறுநீரக கோளாறு இருப்பவர்கள், பீட்ரூட் ஜூஸ் குடிப்பதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் பீட்ரூட்டில் உள்ள பீட்டைன், உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்துவிடும். ஆகவே சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள், பீட்ரூட் ஜூஸைக் குடிப்பதாக இருந்தால், மருத்துவரிடம் ஆலோசித்த பின் குடியுங்கள். மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள் பீட்ரூட்டை உணவில் சேர்த்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். அதேநேரத்தில் பீட்ரூட் ஜூஸை அளவுக்கு அதிகமாக குடித்தால், வயிற்றுப் போக்கு ஏற்படும்.
