Saturday, May 17, 2025
-- Advertisement--

சினிமாவை விட்டு விலக உள்ளாரா நயன்தாரா..? அதிர்ச்சி தகவல் ..!!

லேடி சூப்பர் ஸ்டார் என்னும் பட்டத்தை வாங்குவது சாதாரண விஷயம் அல்ல. அதுவும் சினிமா உலகில் ஒரு பெண்ணாக இருந்து பல கஷ்டங்களைக் கடந்து பல தடைகளை தகர்த்து லேடிஸ் சூப்பர் ஸ்டார் என உயர்ந்துள்ளவர் நயன்தாரா.

தன் தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனை வந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் சினிமாவில் 20 வருடங்களாக பயணித்து வருகிறார். சமீபத்தில் தான் நயன்தாராவிற்கும் தன் நீண்ட நாள் காதலரான விக்னேஷ்வனுக்கும் திருமணம் நடந்தது.

திருமணம் நடந்த கையோடு இருவரும் வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளனர். தற்பொழுது குழந்தை வளர்ப்பதிலும் சினிமா இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் நயன்தாரா தொடர்ந்து படங்களிலும் நடித்து வருகிறார் .

விக்னேஷ் சிவனும் இயக்கத்தில் பிசியாக உள்ளார். ஆனால் நயன்தாராவிற்கு இரண்டு ஆண் குழந்தைகள் என்பதால் குடும்பத்தை பார்த்துக்கொண்டு சினிமாவில் கவனம் செலுத்துவது சிரமமாக உள்ளது எனவும் இதனால் குழந்தைகள் நலனில் பாதிப்பு ஏற்படும் என்பதற்காகவும் சினிமாவை விட்டு விலகி முழுக்க முழுக்க தயாரிப்பில் கவனம் செலுத்தலாம் என்ற பிளானில் நயன்தாரா உள்ளாராம்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles