சமீப காலமாக பலரும் மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலைக்குத் தள்ளப் படுகின்றனர். மன ரீதியான பிரச்சினைகளை சமாளிப்பது தற்போது உள்ள இளைஞர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.
இதன் காரணமாக சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய செய்தது. தற்போது தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன நிலையில் கன்னட சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகர் சுசில் கவுடா.
மிகவும் இளம் வயதிலேயே இவர் பிரபலமடைந்தார். இந்நிலையில் இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருடைய வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த பரிசோதனை வந்த பிறகே அடுத்த கட்ட விசாரணை தொடங்கும் என்று கூறப்படுகின்றது .
அவரின் தற்கொலைக்கு சரியான காரணங்கள் இதுவரை எதுவும் கிடைக்கவில்லை என்றும் போலீசார் அறிவித்துள்ளனர்.
