தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பி வாசு. பி வாசு இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.

இப்படத்தில் கங்கனா ரனாத், வடிவேலு, ராதிகா, மகிமா நம்பியார், லட்சுமிமேனன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இப்படத்தில் நடிகை கங்கனா காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்ட விட்டதால் இறுதியாக சூட்டிங் இருந்து கண்ணீருடன் விடை பெற்றுள்ளார்.

இறுதி நாள் ஷூட்டிங்கில் கேக் வெட்டி பட குழுவினர் அனைவரும் வழி அனுப்பி வைத்துள்ளனர். இந்த வீடியோவை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இத்துடன் கடைசி நாள் ஷூட்டிங்கின் போது ராகவா லாரன்ஸ் உடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

கங்கனா அவர் பதிவில் சந்திரமுகி படப்பிடிப்பை கடைசி நாள், நான் சந்தித்த அற்புத மனிதர்களை விட்டு பிரிய கடினமாக உள்ளது. லாரன்ஸ் மாஸ்டர் ஒரு சைடு டான்ஸராக இருந்து தனது கெரியறை தொடங்கி இன்று பிளாக்பஸ்டர் இயக்குனர், சூப்பர் ஸ்டார் மற்றும் அன்பான,பணிவான அற்புதமான மனிதராக இருக்கிறார்.
உங்கள் பணிவுக்கும் நகைச்சுவைக்கும் நீங்கள் எனக்கு தந்த பிறந்தநாள் பரிசுக்கும் நன்றி சார். உங்களுடன் பணியாற்றியது அற்புதமாக இருந்தது என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவிற்கு நன்றி தெரிவித்த லாரன்ஸ் போட்டுள்ள பதிவில் உங்களது அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.
Thank you for your kind words mam! Your journey is so inspiring without any background. In 20 days Bombay schedule, I was missing my home food a lot and it was so kind of you to arrange delicious food everyday. I had a great time working with you too! Thanks for everything 😊🙏🏼 https://t.co/uHpOviVYKW pic.twitter.com/jvz1L0zQoT
— Raghava Lawrence (@offl_Lawrence) March 15, 2023
எந்தவித பின்பலமும் இல்லாமல் சினிமாவுக்கு வந்துள்ள உங்களின் கதை மிகவும் உத்வேகத்தை கொடுத்தது. மும்பையில் 20 நாள் ஷூட்டிங் என்றதும் எனது வீட்டு சாப்பாட்டை மிகவும் மிஸ் செய்தேன். ஆனால் நீங்கள் தினமும் எனக்கு ருசியான உணவை தயார் செய்து கொடுத்தீர்கள் உங்களுடன் பணியாற்றியது. எனக்கும் சிறந்த நேரமாக இருந்தது அனைத்திற்கும் நன்றி என பதவித்துள்ளார்.