விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். வருட வருடம் சிறந்த பாடகர் படகியை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இதில் பங்குபெறும் போட்டியாளர்களுக்கு ஏதாவது ஒரு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பி அதில் பங்கு பெறுகின்றனர்.

இதில் பலரும் தற்போது சினிமா பின்னணி பாடகராக வலம் வருகின்றனர். இந்நிலையில் செந்தில் ராஜலட்சுமி என்ற கிராமப்புற பாடல்களை பாடும் கணவன் மனைவி ஜோடி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அதில் செந்தில் அந்த நிகழ்ச்சி சீசனின் வெற்றியாளராக வெற்றி பெற்றார்.

தொடர்ந்து இவர்கள் இந்த சீசனில் பாடிய சின்ன மச்சான் பாடலுக்கு பிரபுதேவாவும் தன் படத்தில் ஒரு நடனமாடி இருப்பார். இந்நிலையில் பல இசையமைப்பாளர்களுடன் இவர்கள் தற்போது பாடி பிரபலம் அடைந்து வருகின்றனர். இவர்கள் தான் திருமணத்தின் போது எப்போது உள்ளார்கள் என்று ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதைப் பார்த்து ரசிகர்கள் செந்தில்ராஜலட்சுமியா இப்படி உள்ளார்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.