தற்போது சினி உலகையே அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது சிங்கின் தற்கொலை இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் அதே தெளிவான காரணம் என்று கூறவில்லை. பணம் புகழ் என எல்லாம் இருந்தும் ஒருவரின் தற்கொலைக்கு தன்னை இழுத்துச் செல்கிறார் என்பது புரியாத புதிராகவே உள்ளது.
தோனி என்ற படத்தில் சுஷாந்த் தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார். அவரது மரணச் செய்தி தமிழ் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் என்பதை ஏற்கனவே மறைமுகமாக பதிவிட்டுள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் ஹெட்டர் பக்கத்தையும் மாற்றியுள்ளார். அது ஒரு ஓவியர் வரைந்த புகைப்படம். இந்த புகைப்படம் டச்சுவை சேர்ந்த வின்சென்ட் வான் கோ என்பவரால் வரையப்பட்டது. இந்த ஓவியத்தை கடந்த ஜூலை மாதம் 27 ஆம் தேதி 1890 ஆம் ஆண்டு வரைந்துள்ளார். இந்த ஓவியத்தை வரையும் போது கடுமையான மன அழுத்தத்தில் அவர் இருந்ததாகவும் அந்த ஓவியத்தின் ஈரம் காய்வதற்கு முன்பே தன்னை துப்பாக்கியால் சுட்டுக் தன் உயிரை மாய்த்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் இவர் கடுமையான மன அழுத்தத்தில் இருக்கிறார் என்பதும் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதை முன்பாகவே தெரிவித்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
