Wednesday, May 14, 2025
-- Advertisement--

தமிழ் நாடு உருப்பட ரஜினி முதலமைச்சர் ஆவதுதான் ஒரேவழி..!! துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி..!!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று பல வருடங்களாக ரசிகர்கள் ரஜினிக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி ரஜினி அரசியலுக்கு வருவேன் என அறிவித்திருந்தார்.

இவர் கூறி இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் ரஜினிதான் முதலமைச்சருக்கானா வேட்பாளர் என்று அவரது ரசிகர்கள் நினைத்து வந்தனர். ஆனால் ரஜினிகாந்த் விரைவில் கட்சி தொடங்கும் அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும், ஆனால் நான் முதலமைச்சராக மாட்டேன், தலைமை என்னுடையது ஆனால் பொறுப்பு மட்டும் எண்டுடையது இல்லை என்று கூறி ரசிகர்களுக்கு மிகவும் வருத்தம் அளித்தாலும், இதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அன்பு கட்டளை இட்டிருந்தார்.

இந்நிலையில் பிரபல இதழ் ஆன துக்ளக் இதழில் ஆசிரியர் குருமூர்த்தி இந்த முடிவிற்கு ரஜினி மறு சிந்தனை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். அதற்கு துக்ளக் பத்திரிக்கையில் வாசகர் ஒருவர் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி இது குறித்த கேள்வி ஒன்றை கேட்டிருந்தார்.

அதில் ரஜினி மறு சிந்தனை செய்ய வேண்டும் என்று நீங்கள் எதை கூறுகின்றனர், என்று கேட்டதற்கு குருமூர்த்தி, அதற்கு பதிலாக ” தமிழ் நாடு உருப்பட வாய்ப்பிருக்கிறது என்பதை தான் நான் கூறுகிறேன் என்று பதிலளித்துள்ளார்.

இதனால் ரஜினி ஆஆரம்பிக்கும் கட்சியில் அவர்தான் முதலமைச்சருக்கான வேட்பாளராக வேண்டும் என்பதை அவர் மறு சிந்தனை செய்ய வேண்டும் என்று கூறுகிறார், இந்த மறு சிந்தனையை ரஜினிகாந்த் செய்வாரா என்பதை நாம் அனைவரும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles