சின்னத்திரையில் பிரபல இசை தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம் வந்தவர் மணிமேகலை. இவர் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றவர். துருதுருவென இவரது பேச்சு பல மக்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில் சினிமா துறையில் நடன கலைஞராக பணிபுரியும் ஹுசேனை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்காததால் தற்போது தனிமையில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் வெளியான மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கு பெற்றதன் மூலம் பிரபலமானார்.
இந்நிலையில் இசை தொலைக்காட்சியில் இருந்து விலகி தற்போது விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும், சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பாளராககவும் இருந்து வருகிறார். இவருக்கு அதிக ரசிகர்கள் இணையத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் மணிமேகலை எப்போதும் துருதுருவென படபடவென பேசிக்கொண்டே இருப்பார். இவரது இதுதான் இவரது இயல்பான குணம். தற்போது தன்னை மிகவும் அமைதியாக காட்டிக் கொள்வதற்காக சேலையில் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளதாக அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.